தருமபுரி, பிப்ரவரி 24 –
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் இயக்க வலியுறுத்தி (26-2-2026) வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய பேருந்து நிலையம் மாற்றத்தால் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே பழைய புறநகர் பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கையுடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவு வழங்குமாறு வணிகர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.



