கிருஷ்ணகிரி, மே 22 –
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் பெருளாளர் சுப்பிரமணி ரெட்டி, வரதராஜ், கண்ணப்பன் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளை மாவட்ட பொதுச் செயலாளர் அனுமத்தராஜ் வரவேற்று பேசினார்.
மேலும் இந்த கூடத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு புதியதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யட்டும் என்று அறிந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வருகின்ற ஜீலை 5ம் தேதி நடைபெற உள்ள உழவர் தினப் பேரணியை கிருஷ்ணகிரியில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டதில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் அறுவடைக்கு தயரான மாங்காய்கள் தீர்ந்து நாசமானதால் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் யானை, காட்டுப் பன்றிகளைத் தொடர்ந்து மயில்களின் தொல்லை அதிகரித்து உள்ளதல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதால் அதற்கான இழப்பீடு தொகையினை வழங்கி மயில்களை கட்டுப்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஓட்டு, அலியாளம், எண்ணேக்கொல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளை கட்ட அதற்கான நிதியை ஓதிக்கீடு செய்து அனைத்து ஏரிகளுக்கும் தண்ணி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிகளில் பெற்ற கல்வி கடனையும் ரத்து செய்வதோடு தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி ஆனைத்து விவசாயிகளும் வங்கிகளில் பெற்ற உடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது விவசாய சங்கதினை சேர்ந்த நாகராஜ், ரவி, செல்வராஜ், முனிரத்தினம், சின்னசாமி, மரஞ்சித்குமார், செல்வராஜ், முனுசாமி, பாலாஜி, பாஸ்கர், முத்து, சக்திவேல், திம்மராயன், ராஜீவ் காந்தி, நாராயணன், ராஜா, மாரியப்பன், கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான விவசாய கலந்து கொண்டனர்.



