விளாத்திகுளம், பிப்ரவரி 21 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தினையும், சக்கம்மாள்புரம் ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.46.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்து கலந்து கொண்டார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



