நீலகிரி. ஏப்ரல். 13
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, இன்று கோத்தகிரி அருகே ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளினையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழியானது பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில் உறுதிமொழியேற்பு நடைபெற்றது.
உதகை அரசு மருத்துவ மனை மருத்துவர் மணிகண்டன் முன்னிலை வகித்து, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றி பேசியதோடு அவர் ஆற்றிய அரும்பணிகளை பட்டியலிட்டார்.
இதில் பிசியோதெரபிஸ்டட் திவ்யா, ஆசிரியை கமலா, மீனா, பகல் நேர பாதுகாப்பு மையப் பொறுப்பாளர்கள் பத்மாவதி, கனகவல்லி, பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். மாணவி பிரியதர்ஷினி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.



