நீலகிரி. ஏப்ரல்.05
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் தழுவிய அளவில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோத்தகிரியில், நீலகிரி மாவட்டம் மக்கள் அதிகாரத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ரவி அவர்கள் முழக்கம் எழுப்பினார். கோத்தகிரி
ரத்ததான நண்பர்கள் குழுவை சேர்ந்த செல்வம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மணிகண்டராஜ் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் மசோதாவை கண்டித்து உரையாற்றினார்.
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் புவனேஷ் அவர்கள் வக்பு சட்டத்திருத்தம் மசோதா என்பது மிகப் பெரிய ஆபத்து என்பது வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் அவர்கள் பங்கேற்று
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு தமது கண்டனங்களை பதிவு செய்தார்.
இறுதியாக மக்கள் அதிகாரமும், தோழமை அமைப்பின் மாவட்ட இணை செயலாளர் வெங்கட். கண்டன உரையாற்றினார்.
பிறகு முழக்கங்கள் எழுப்பி மக்கள் அதிகாரம் அமைப்பின் ரவீந்திரன் நன்றி உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இன்றைய புதிய தாராளவாத பொருளாதாரா சூழலில் இந்துக்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கி இருக்கும் மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, இஸ்லாமியர்களின் பக்கம் கவனத்தை திருப்பி, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக சட்டபூர்வமாக அங்கீகரிக்க வைக்கும் இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். இதற்கு எதிராக மக்களை திரட்டி ஜனநாயக கூட்டரசெய் நிறுவும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும். என அனைவரும் வலியுறுத்தி பேசினர்.



