புளியங்குடி, டிசம்பர் 31 –
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புளியங்குடி இந்திரா காலனியில் 30 வருடமாக நிரந்தரமாக வசித்து வரக்கூடிய ஆதிதிராவிட மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், நந்தகோபால் தலைவர் வன்னிய ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்து சமய ஆலய பாதுகாப்பு மாநில செயலாளர் கார்த்திகேயன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தர்மர், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் மாடசாமி, நகர பாஜக மையக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சண்முகையா, கணேசன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் தளவாய், மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சபரி மணி நன்றி கூறினார்.



