ஈரோடு, நவ. 22 –
தமிழக துணை முதல் அமைச்சரும், தி.மு.க இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 -வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க இளைஞரணி சார்பில் மாநில அளவிலான சதுரங்கம், ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர் முத்துசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். வி.சி.சந்திரகுமார் எம். எல்.ஏ முன்னிலை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார்.
சதுரங்க போட்டியில் 400 பேரும் மற்ற போட்டிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களை அமைச்சர் முத்துசாமி ஊக்கப்படுத்தியதோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் செந்தில் குமார், செல்லப்பொன்னி மனோகரன், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சேந்தபுகழன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் செய்திருந்தார்.



