திருச்சி, ஏப். 28 –
திருச்சி ராமலிங்க நகரில் கடைக்குச் சென்ற சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி வெங்கடேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


