குமரி மாவட்டத்தில் உள்ளஅருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி நேற்று ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தடைந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து
கூட்டாலுமூடு, பைங்குளம் அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் சாா்பில் 10 நாள் சித்திரை திருவிழா மற்றும் ஹிந்து சமய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா். என்.ரவி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சென்றார்.



