வேளச்சேரி, அக். 13 –
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரியில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மாபெரும் வாக்கத்தான் அக்டோபர் 11, 2025 அன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் இஏபிஏ மற்றும் இஸ்லாமிய வர்த்தகர்கள் நலசங்கம் மற்றும் எக்ஸ்னோரா ஆகியவற்றுடன் இணைந்து ஆரோக்கியமான காற்று பசுமையான எதிர்காலம் என்ற கருப்பொருளில் சூழலியல் நடைப்பயணத்தை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நடைப்பயணத்தில் 1500க்கும் மேலான மாணவர்கள், பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஜனாப் எம்.ஜி.தாவூத் மியாகான், மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் துணைமேயர் கோ.காமராஜ், உதவி வனப் பாதுகாவலர் சி.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்த நடைப்பயணமானது காமராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கி கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கல்லூரியில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் துணை மேயர் கோ.காமராஜ், மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைவரும் சிறப்பு உரையாற்றினார்கள்
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஜனாப் எம்.ஜி.தாவூத் மியாகான் அவர்கள் 50வது ஆண்டு கல்லூரி பொன்விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நடைபயணம் மக்களிடையே பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க நடைபெற்ற ஒரு முயற்சி என்று தன் தலைமையுரையில் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் எம்.தங்கராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இஸ்லாமிய வர்த்தகர்கள் நல சங்க செயலாளர் அயூப் கான் மற்றும் தாம்பரம் வனத்துறை ரேஞ்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பிற முக்கிய விருந்தினர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.அம்துல் தவாப், கல்லூரி கண்காணிப்பாளர் ஏ.மசார் கான், துணை முதல்வர்கள், ஐ.க்யூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
காமராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பிற கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர், அனைவரும் பதாகைகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செய்திகளை ஏந்தியிருந்தனர். நிகழ்வின் இறுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, மரம் நடுவதை ஊக்குவித்தல் மற்றும் ஆரோக்கியமான காற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது குறித்து கூட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூகத்தை முன்னிறுத்தி சுற்றுச்சூழல் நடவடிக்கை மூலம் கிரகத்தைப் பாதுகாப்பதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இந்தநிகழ்வு அமைந்தது.



