மார்த்தாண்டம் , மே – 19
மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் லெனின் குமார் (41). ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் வழிப்பாதையில் நின்ற முந்திரி மரத்தை வெட்டியது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவ தினம் லெனின் குமார் பிரச்சனைக்குரிய இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆல்பின்சிங் மற்றும் மூன்று பேர் சேர்ந்து லெனின் குமாரிடம் தகராறு செய்து, தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஆல்வின் சிங் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.