களியக்காவிளை, மார்ச் 20-
குரியின்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் நடக்கும் 12-வது பஞ்சபூத வித்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகத்திற்கான கால்நாட்டு விழா நடந்தது.
கவியக்காவிளை அருகே பாத்திமாநகர் குரியன்விளையில் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முதல்கட்டமாக கால்நாட்டு விழா நேற்று நடந்தது. காலை மஹா கணபதி ஹோமம் கோயில் தந்திரி நாராயண ராவ் வாசுதேவ், தலைமையில் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கால்நாட்டு விழாவிற்கான பூஜைகள், கால்நாட்டு விழா நடந்தது. இதில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி, வக்கீல் செல்வகுமார், திருவிழா கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



