திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திமுக நிர்வாகிகளுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து செங்கம் நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செங்கம் தோக்கவாடி பகுதியில் புதியதாக நிறுவப்பட்டு உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்பொழுது நகரச் செயலாளர் அன்பழகன்,
நகர் மன்றத் தலைவர் சாதிக்பாஷா,
ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார், ஏழுமலை மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.