தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில தேசிய தன்னார்வ ரத்ததான நாள் 2024-ஐ முன்னிட்டு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம்கள் நடத்திக் கொடுத்த 32 அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, அரசு தருமபுரி மருத்துவக்கல்லுாரி முதலவர் திருமதி அமுதவள்ளி ஆகியோர் உள்ளனர்



