திருவண்ணாமலை மே 21
தி.வ.மலை
மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர்/ துணை முதலமைச்சரின் உத்தரவின்படி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர். ஆணையத்தின் தலைவர் அருண் சே தலைமையில் ஆய்வு கூட்டம் வருகின்ற 28 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.எனவே சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளும் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு கருத்துக்களை கேட்டறியவும் உள்ளார்.
அதுசமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும். சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தங்களது கருத்துக்களையும் தெரிவிக்குமாறு, தெரிவித்துள்ளார்.



