திருவண்ணாமலை, அக். 27 –
திருவண்ணாமலை கிரிவலப்பாதை விஜய் பாலாஜி திருமண மண்டபத்தில் சிவஅண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளையின் 2-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரங்க மகாதேவன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் நிறுவனர் ச.கணேசனுக்கு “உழவார செம்மல்” விருதினை நீதிபதி அரங்க மகாதேவன் வழங்கினார்.
இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் தமிழகத்தில் இதுவரை 295 கோயில்களை சுத்தம் செய்துள்ளது. 3 தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் சுத்தம் செய்யும் பணியில் இந்த அமைப்பின் சார்பில் 350 சிவத்தொண்டர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



