திருவண்ணாமலை, ஜன. 19 –
திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 41-வது பாரதியார் தின மாநில அளவிலான கையுந்துப் போட்டி (வாலிபால்) நடைபெற்றது. இதில் மூத்தோர் தடகள சங்க மாநில துணைத் தலைவர் கார்த்தி வேல்மாறன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி அலுவலர் சின்னப்பன், பள்ளியின் தலைமையாசிரியர் ராஜா, உடற்கல்வி இயக்குநர் டெல்லிராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், சுரேஷ்குமார், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
இங்கு நடைபெற்ற போட்டியில் கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சென்னை, அரியலூர், சேலம் ஆகிய 10 மாவட்ட அணிகள் பங்கேற்றன.



