கன்னியாகுமரி, நவ. 12 –
கன்னியாகுமரி அருகே பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் மகன் கந்தன் (36) வீட்டுக்கு சென்று இரவு தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்தவுடன் மனைவி கீழே சென்று பார்த்தபோது, அறைகதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது தங்கராஜ் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில், கயிறு அறுந்து விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மகன் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து தெரிந்து வந்தது.
இது குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தங்கராஜ் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


