திருப்பூர், மே 11 –
தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து பயணிக் கட்டும் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி 43வது வார்டு தலைவி எஸ்.பிரேமலதா தலைமையில் மக்கள் நலம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி அவர்களின் சேவைகளை பாராட்டினர்.
வெற்றி கொண்டாட்டத்தில் தேசியத் தோழர்கள் அபுதாஹீர், ராமகிருஷ்ணன், பாபு, அம்ஜத் கான், தேவா, ஏழுமலை, செல்வம், சாதி பாட்ஷா, டி.வி.கே.மூர்த்தி மற்றும் பல் சமய நட்புறவு தலைவர் ஷாஜகான், 43வது வார்டு நிர்வாகிகள் சௌமியா, கவிதா, பெனாசீர் சந்தோசினி, ஜெயந்தி பிரியா, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.



