கன்னியாகுமரி,நவ.30:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் குலசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத் முன்னிலை வகித்து நெற்பயிரில் உரமேலாண்மை பற்றி விவரித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை அலுவலர் முத்துராஜா வேளாண்மை துறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் தர்மராஜ் அவர்கள் தோட்டக்கலை துறை மூலம் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார். மயிலாடி உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் மோகன் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ரக்சனா ,உதவி வேளாண்மை அலுவலர் ஹரணி உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா மற்றும் குலசேகரபுரம் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.