தஞ்சாவூர். ஏப்ரல் 19.
தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு அமைக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சேர்ந்த அனைத்து மக்கள் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு இயக்க ங்கள் அனைத்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு உலக தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார் .தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அன்பரசன், விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வழக்கறிஞர் ஜீவகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பேரமைப்பு மாநகர செயல ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் துரை குபேந்திரன், என்ஜினீயர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் சின்னை. பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேவையா முடித்து வைத்தார்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகி றது .ரயில் நிலைய முகப்பில் ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு வடிவமை க்கப்பட்டிருந்தது .தற்போது நடந்து வரும் சீரமைப்பு பணிகளால் பெரிய கோவில் கோபுரம் போன்ற மாதிரி எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வடநாட்டு மந்திர்கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதனை கைவிட்டு முன்பிருந்த வாறு ரயில் நிலைய முகப்பில் பெரிய கோவில் கோபுரத்தை வைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்
இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக துரை. மதிவாணன் நன்றி கூறினார்



