தஞ்சாவூர், மே 21 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் விற்பனைக்கு நிறுத்த கோரி மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கூறி வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று தஞ்சாவூர் ரெயில், பழைய கோர்ட்டு சாலை, ராமநாதன் ரவுண்டானா, தெற்கு வீதி, தெற்கு அலங்கம் உள்பட மாவட்ட முழுவதும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
சுமார் 3000 மருந்தகங்கள் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த மருந்தகங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு, மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தத்தில் ஆன்லைன் மருந்துவிற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகவும், இளம் தலைமுறை காக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும்
ஆன்லைன் மூலம் வாங்கப்படும், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும், உயிரிழப்புகள் மற்றும் கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும், முகம் தெரியாத ஆன்லைன் விற்பனையாளரால் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுத்திட வேண்டும், மத்திய அரசு மருந்து விற்பனைக்கு விதித்துள்ள விதிகளை தளர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மருந்தகங்கள் அடைப்பினால் மாத்திரைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் செயல்படும் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அதேபோல பிரதம மந்திரி மருந்துகளும், பெரும்பாலும் செயல்பட்டன. தமிழக அரசு சார்பில் மானிய விலையில் தரமான மருந்துகள் வழங்க கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் முதல்வர் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் பாதிப்புகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் போராட்டத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



