தஞ்சாவூர், ஏப். 30 –
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மாணவர் நிர்வாக மய்யம், மற்றும் மொழிகள் துறையினரால் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136 வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கவியரங்கம் லீ கார் பூசியர் அரங்கத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இளங்கலை மாணவி ரா.வை. லதா ஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.
எழுத்தாளர் வல்லம் தாஜூ பால் நடுவராக இருந்து புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலும், பெண்ணுரிமை பெற்ற உலகம் என்ற தலைப்பில் உதவிப்பேராசிரியர் து உமா மகேஸ்வரியும், மூட நம்பிக்கையற்ற உலகம் என்ற தலைப்பில் கணினி அறிவியல் துறை முதுகலை மாணவி ஸ்ரீநிதியும், போரற்ற உலகம் என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் அரசியல் அறிவியல் துறை இர. சாம் ராஜாவும், சமத்துவ உலகம்என்ற தலைப்பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இளங்கலை மாணவி க.முத்தரசி ஆகியோர் பேசினர். நிறைவாக அரசியல் அறிவியல் துறை இளங்கலை மாணவி ஜா. ஜெனிலியா ஜான்சி நன்றி கூறினார்.



