பூதப்பாண்டி – நவம்பர் – 14-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகியபாண்டியபுரம் சந்திப்பில் (ஆரல்வாய்மொழியிலிருந்து -நெடுமங்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையாகும் )இந்த சாலையின் மேற்கு பக்கம் பஸ் நிறுத்துமிடம் அருகில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளையில் அருகே பஸ் நிறுத்தமும் பெருந்தலை காடு மற்றும் உலக்கையருவி செல்லும் உபசாலையும் உள்ளது எந்த நேரமும் இந்த இடம் வாகனம் போக்குவரத்து அதிகமான ஒரு பகுதியாகும் மற்றும் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும் அரசு பேருந்திற்க்காக நிற்க்கும் ஒரு இடமாகவும் உள்ளது. இதே நேரத்தில் தனியார் வாகனங்களும், டூவிலர்களும், பள்ளி கல்லூரி வாகனங்களும்,
நாகர்கோவிலிலிருந்து வரும் அரசு பேருந்துகளான காளிகேசம்,கீரிப்பாறை,கேசவன்புதூர்,தடிக்காரன்கோணம் ,அருமனை,
மார்த்தாண்டம், உலக்கையருவி, பெருந்தலை காடு செல்லும் பேரூந்துகளும் வந்து செல்லும் இடமாகாகவும், அந்த வாகனங்கள் திரும்ப வரும் பாதையாகவும் உள்ளதுஇந்த வளைவு சாலையின் முன்பகுதியும் பின்பகுதியிலும் பேரூந்து நிறுத்தங்களும் அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் வரும் போது இட நெருக்கடி மற்றும் வளைவான பகுதியானதால் அருகில் உள்ள ஓடையில் வாகனங்கள் சிக்கி அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொது மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த வளைவான சாலையை கொஞ்சம் விரிவாக்கம் செய்து விபத்துக்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.