நிலக்கோட்டை,டிச.20:
சட்டமேதை அம்பேக்காரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்சாவை கண்டித்து, நிலக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு,நகரச் செயலாளர் ஜோசப்கோவில் பிள்ளை தலைமையில் நூற்றும் மேற்பட்ட திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோட்டில் உள்ள வட்டார தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்டமேதை டாக்டர் அம்பேத்காரை இழிவாக பேசிய ஒன்றிய பாஜக அமைச்சர் அமித்சாவை கண்டித்து நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆலோசனைப்படி, பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,ஆர்பாட்டத்தில் சட்ட மேதை அம்பேத்காரை விமர்ச்சித்து வரும் அமித்சா பதவி விலக கோரியும்,பாஜக-வுடன் இரகசிக கூட்டணி வைத்து அதற்கு துணைபோகும் அதிமுக-வை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது,ஒன்றிய துணைச்செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுமாறன்,மணிமேகலை,பொறுப்பாளர்கள் வசந்தி,செல்லப்பாண்டி, அம்மாவாசி,பேரூர் பொறுப்பாளர்கள் குட்டி,தங்கராசு, அழகர் உட்பட மாவட்ட,ஒன்றிய ஊராட்சி பேரூர் கழக பொறுப்பாளர்கள்,மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…



