ஈரோடு, ஆக. 27 –
வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி ஈரோடு கொங்குகலையரங்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் அளித்த மனுதாரரின் மனுவின் மீது உடனடி தீர்வாக நலத்திட்ட உதவியினை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் காட்டு சுப்பு, கவுன்சிலரும் திமுக மாவட்ட துணை செயலாளருமான செல்லப்பொன்னி மனோகரன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.



