திருவெண்ணெய்நல்லூர், ஆக. 30 –
திருவெண்ணெய்நல்லூர் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளுக்காக இருசக்கர வாகனங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஏ.வ.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மா.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராமம் (எ) திருமுண்டீச்சரம் கிராமத்தை சேர்ந்த திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சசிக்குமார் இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொண்டார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் ஒன்றிய செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



