ஊட்டி. ஜன. 09
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து,தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் நாட்டையும், தமிழ் மரபையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்ததாக தமிழக ஆளுநரை கண்டித்து இன்று தமிழக முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் உதகை ஏடிசி பகுதியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்தும், பெஸ்ட்டு, பெஸ்ட்டு திராவிட மாடல்தான் பெஸ்ட்டு, தமிழர்களை அவமதிக்கும் ஆளுநரை கண்டிக்கிறோம், ஓடிப்போ ஓடிப்போ சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநரே ஓடிப்போ உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் ஜே.ரவிக்குமார், நகர கழகச் செயலாளர் எஸ்.ஜார்ஜ் ஒன்றிய செயலாளர்கள் , மகளிர் அணியினர் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



