திருப்பத்தூர், ஆக. 22 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டத்திற்குட்பட்ட குனிச்சி ஊராட்சியில் ரூ 3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட குனிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர். உடன் அரசு துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.



