தஞ்சாவூர் ஜூன். 4.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது
மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் தாய் தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது இதில் 597 குழந்தைகளுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை என்பது தெரியவந்தது மேலும் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையும், 2,900 குழந்தைகளுக்கு தாயும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக தாயும் தந்தையும் இல்லாத குழந்தை களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருக்கும் ஒரு வருவாய்த்துறை அலுவலரை பொறுப்பாளராக நியமித்து உள்ளோம் .குழந்தைகள் எந்த குடும்பத்தில் இருக்கிறதோ அக் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் அக்குழந்தைகளின் படிப்பு எக்காரணத்தை கொண்டும் நிற்காமல் பள்ளிக்கல்வி முடித்து விட்டு உயர்கல்விக்கு போக வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கணக்கெடுப்பில் நிறைய பேருக்கு வீடு இல்லை என்பதும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்து அக்குடும்பம் இயங்குகிறது என்பதும் தெரிய வந்தது. இக் குடும்பங்களுக்கு என்னென்ன அரசு நலத்திட்ட உதவிகள் இருக்கிறதோ ,அவற்றை எல்லாம் இலக்கு நிர்ணயித்து சேர்ப்பது தான் இத்திட்டத்தின் நோக்கம்.
மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக கல்வித் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பள்ளிக்குச் செல்லாத குழந்தை களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உறுதிப் படுத்துகின்றனர்
மாவட்டத்தில் நீர்வள துறை மூலம் 93 சதவீதமும்,வேளாண் பொறியியல் துறை மூலம் 97 சதவீதமும், தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கும் போது சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விதமாக தயார் நிலையில் வைத்திருக்கி றோம் என்றார் கலெக்டர்.


