கிருஷ்ணகிரி, ஆக. 13 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15.08.2025 சுதந்திர தினத்தன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், சென்னை அவர்களிடமிருந்து வரப் பெற்ற கூட்டபொருள்கள் குறித்து கிராம சபையில்
விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கிராம சபை கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



