கிருஷ்ணகிரி, மே 20 –
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. அப்பள்ளியில் பயின்ற சௌஜன்யா என்ற மாணவி மாநில அளவில் 499 மதிபெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, செயலாளர் தனசேகர் ஆகியோர் மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.
சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் இப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே மாநில அளவில் சாதனை படைத்துள்ளது என பள்ளியின் செயலாளர் தனசேகர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கூறுகையில் 11ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவு எடுத்து படிக்க உள்ளதாக தெரிவித்தார்.



