கிருஷ்ணகிரி, மே 15 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரை தென்மேற்கு பருவ காற்றினால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மழை வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை பணிகள் குறித்து வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



