தருமபுரி, ஜூலை 4 –
தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தின் பின் தங்கிய ஏழு ஜோடிகளுக்கு திருமண விழா தருமபுரி கோட்டை பர வாசு தேவ பெருமாள் கோவிலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு வரவேற்றார். விழாவில் 7 ஜோடிகளுக்கு முறைப்படி திருமண விழா நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு நாலு கிராம் தங்க திருமாங்கல்யம் உள்பட தலா ரூ .70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு சேலம் துணை ஆணையர் விமலா, கோட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுருளி ராஜன், செயல் அலுவலர் ராஜகோபால், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோயில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.