தருமபுரி, ஏப்ரல் 25 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் மூர்த்தி (54), கூலித்தொழிலாளி. இவர் வியாழக்கிழமை அன்று தருமபுரி – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள மருந்து கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


