மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து, வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலே வழங்கிடும் உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறைஎன்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் அம்மாபட்டி ஊராட்சி குரும்பட்டி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் .என்.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை என்ற புதிய திட்டத்தை இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின்கீழ், உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடைவளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட தேவையான தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், அனைத்துத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறத்துறை உள்ளிட்ட பிறத் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து வட்டாரம் வாரியாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும். இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
எனவே தங்களது கிராமங்களில் இம்முகாம் நடைபெறும்போது விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறையின் சார்பில் தென்னங்கன்று 1 நபருக்கும், தக்காளி நாற்று 2 நபர்களுக்கும், வேளாண் இடுபொருட்கள் 2 நபர்ளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இன்றைய தினம் ஆண்டிபட்டி வட்டத்தில் சண்முகசுந்தரபுரம், தெப்பம்பட்டி தேனி வட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி, பெரியகுளம் வட்டத்தில் வடகரை பிட்-1, கெங்குவார்பட்டி பிட்-1, கடமலைக்குண்டு வட்டத்தில் மயிலாடும்பாறை, வள்ளல்நதி (கண்டமனூர்), போடிநாயக்கனூர் வட்டத்தில் உப்புக்கோட்டை, பூதிப்புரம், சின்னமனூர் வட்டத்தில் சின்னஓவுலாபுரம், ஓடைப்பட்டி, உத்தமபாளையம் வட்டத்தில் அம்மாபட்டி, மல்லிங்காபுரம், கம்பம் வட்டத்தில் க.புதுப்பட்டி, கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது.
பின்னர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் கட்டுமான பணிகளையும், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் இணை இயக்குநர்கள் சாந்தாமணி (வேளாண்மைத்துறை), கோயில்ராஜா (கால்நடை பராமரிப்புத்துறை), கலைச்செல்வி (மருத்துவப்பணிகள்), துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) நிர்மலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வளர்மதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு.