சுசீந்திரம், மே 13 –
பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜா. இவரது மகன் மனிஷ்ரதன் (28). இவர்கள் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள என். ஜி. ஓ. காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணியளவில் மனிஷ்ரதன் தனது மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து என். ஜி. ஓ. காலனி நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானம் அருகில் நாகர்கோவிலில் இருந்து மேலகிருஷ்ணாபுதூர் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மனிஷ்ரதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மனிஷ்ரதன் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனிஷ்ரதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து மனிஷ்ரதன் தாயார் மேரி எமல்டா சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு விசாரணையில் மனிஷ்ரதன் மீது மோதிய வாலிபர் பீச்ரோட்டை சேர்ந்த தீபக் (18) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


