சென்னை, ஜூலை 08 –
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் அமைந்துள்ள “தி ஐ ஃபவுண்டேஷன்” சிறப்பு கண் மருத்துவமனையை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக பத்மபூஷன் நல்லி குப்புசாமி, அகில இந்திய கண் மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பார்த்த பிஸ்வாஸ், பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், தி. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தி ஐ ஃபவுண்டேஷன் மெடிகல் டைரக்டர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.



