தருமபுரி டவுன் அண்ணாமலை கவுண்டர் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஓமம் செய்து விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொழுக்கட்டை, சுண்டல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விழா குழுவினர்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள சாலை விநாயகருக்கு வெள்ளி கவசம் சாதப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர்கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1,300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. மாவட்ட முழுவதும் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.



