கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மிட்டபள்ளியில் அமைந்துள்ள மண்ணகம் அறக்கட்டளையில் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம் சார்பில் முதல்வர் முனைவர்
சி. ஶ்ரீதரண். விவசாயிகளுக்கு இயற்கை உரங்களின் மூலமாக தென்னையில் பூச்சி மேலாண்மை மற்றும் தென்னை வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் கவிநிலா, மற்றும் ஜனனி, முனைவர் கோவிந்தராஜ் பூவிழிராஜன் பரத் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து
கல்லுாரி மாணவர்களின் சார்பில் காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மண்ணகம் அறக்கட்டைளையின் ஒருங்கிணைப்பாளர் த.சுரேந்திரனிடம் விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தார்கள்.



