கிருஷ்ணகிரி,மே.19- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட ஜெகதேவி
கிராமத்தில் பல்வேறு காரணங்களால் மறைந்த
கழக பிரமுகர்களின் இல்லங்களில் நேரில் சென்று அவர்களது திருவுருவப்படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தி
குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். பர்கூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.அறிஞர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி உள்பட கலக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



