By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட
கனஂனியாகுமரிமாவட்டம்

நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட

Last updated: October 18, 2024 11:35 am
October 18, 2024
79 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 18

 

குமரி மாவட்டத்திலிருந்து நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட சுவாமி சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தன. இங்கு வைத்து சுவாமி சிலைகளுக்கு கேரள போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.

 

திருவிதாங்கூா் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னா், நவராத்திரி விழாவுக்காக ஆண்டுதோறும் பத்மநாபபுரத்தில் இருந்து சரஸ்வதி அம்மன், 

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி 

ஆகிய சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்படும். நவராத்திரி விழா நிறைவு பெற்ற பின்னா் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும். மன்னா் ஆட்சி காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நிகழாண்டு நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் பல்லக்கிலும் பத்மநாபபுரத்தில் இருந்து கடந்த அக். 1-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது. 

 இதனைத் தொடர்ந்து  நவராத்திரி விழா நிறைவுபெற்றதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து சுவாமி சிலைகள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. 

நெய்யாற்றின்கரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு தங்கலுக்குப் பின்னா், புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு சுவாமி சிலைகள் வந்தடைந்தன. பின்னா் சுவாமி ஊா்வல பொறுப்பை கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை கண்காணிப்பாளா் சிவகுமாா் மற்றும் அதிகாரிகளிடம் கேரள காவல்துறையினா் ஒப்படைத்தனா். மேலும் சுவாமி சிலைகளுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.

 

குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இரவு தங்கலுக்குப் பின் சுவாமி சிலைகள் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து முன்னுதித்த அம்மன் சிலை சுசீந்திரம் கோயிலுக்கும், குமாரசுவாமி சிலை வேளிமலை கோயிலுக்கும் கொண்டு செல்லப்படும்.

விளம்பரம்

You Might Also Like

ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
40 வருடங்களுக்குப் தேர் திருவிழா
தைப்பூச தேர்த்திருவிழா
குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி நிறைவு விழா
ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2026
19 Views
களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவராக ஆர்.சிவா பொறுப்பேற்றுக் கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account