ராமநாதபுரம், மார்ச் 2 –
ஈரானுக்கு எதிராக பயங்கரவாத அமெரிக்கா தாக்குதலை கண்டித்தும் ஈரானின் உச்ச தலைவர் இமாம் அலி கமேனி படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மாநிலம் தழுவிய அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக தொண்டி பேரூர் பி.வி.பட்டிணத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக சார்பாக தமுமுக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு சொந்தங்கள் மற்றும் தமுமுக மமக தொண்டி பேரூர், பி.வி.பட்டிணம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளான சமூக சொந்தங்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை பி.வி.பட்டிணம் கிளை தலைவர் சலீம், தமுமுக செயலாளர் ரியாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் தொண்டி கிழக்கு பகுதி் தமுமுக செயலாளர் இபுராமுஷா, தொண்டி பேரூர் மமக துணை செயலாளர் ரிஸ்வான், தொண்டி இளைஞர் அணி செயலாளர் யாசிர், நம்புதாளை தமுமுக செயலாளர் ஜாசிர், மற்றும் பி.வி.பட்டிணம் ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



