காஞ்சிபுரம் ஏப்ரல் 14
உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக அதன் நிறுவனர் முகமது மூஷா
ஏற்பாட்டில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைத் தாய்மார்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் என 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் தேவையறிந்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வாழ்வாதார உதவிகள் செய்து மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவித் தொகை கல்வி உபகரண பொருட்களை
வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து
முகமது மூஷா இது குறித்து தெரிவிக்கையில்
சாலையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு உணவுமுறை வெஜிடேபிள் பிரியாணி மற்றும் ஊறுகாய் தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் காலங்களில் போர்வை பிரட் பாக்கெட் சாலையோர மக்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றும் மழை காலங்களில் பெரிய பிரட் பாக்கெட் கிசான் ஜாம் 500 ML தண்ணீர் பாட்டில் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச ஆம்புலன்ஸ் சேவை பெட்ரோல் கட்டணமின்றி டிரைவர் கட்டணமின்றி மாதந்தோரும் உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.



