தஞ்சாவூர், ஜுன் 29 –
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.காயதிரி, டி.செந்தில் குமார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டி. செந்தில்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் தஞ்சாவூர், கர்னல் கபில்துலி, தேசிய மாணவர் படை தஞ்சாவூர், (தமிழ்நாடு) விமானப் படை தொழில்நுட்ப பிரிவு, தேசிய மாணவர் படை வின் கமாண்டர் கே.சுபாஷ் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த மாரத்தான் போட்டியில் 21 கி.மீ., 10 கி.மீ., 05 கி.மீ., 02 கி.மீ., என நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். மொத்தம் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.



