தஞ்சாவூர், ஏப்ரல் 20 –
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா என்னும் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது.
அது சமயம் தேர்தல் விழிப்புணர்வு கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த உறுதி மொழியில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.



