பூதப்பாண்டி, டிச. 1 –
பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (25). கொத்தனார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடன் பிறந்த நான்கு பேர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் தெரிசனம் கோப்பில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கண்டவளவு சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறிய சதீஷ் கீழே விழுந்த படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



