By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

Last updated: June 9, 2026 7:07 pm
June 9, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் காவல் ஏ ஐ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலைகளின் நான்கு திசைகளிலும் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்டறியும் திறன் கொண்டவை. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மானிட்டரில் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். மேலும், விதிமீறலின் தன்மைக்கேற்ப அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ள புதுமையான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக இந்த ஏஐ செயலியை வடிவமைத்த சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களை சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

இந்த முயற்சி மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதுடன், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், போக்குவரத்து ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட புதிய எஸ்.பி.,க்கு நாம் தமிழர் கட்சி
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
இரணியல் அருகே வீட்டில் இறந்து கிடந்த மீன் வியாபாரி; போலீசார் விசாரணை
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

June 2, 2025
31 Views
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை யொட்டி
தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account