தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கி வைத்ததை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 901 மாணவ மாணவிகள் பயன் பெறும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பி பள்ளிப்பட்டி செயின்மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் உடன் முன்னாள் அமைச்சர் பி பழனி அப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா திட்ட அலுவலர் பத்ஹி முகமது நசீர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுமதி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



