நாகர்கோவில், ஏப். 11 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ நேற்று காலையில் தொகுதிக்குட்பட்ட கோதை கிராமம் சிவன் கோவில் அருகில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் புரவசேரி, நாஞ்சில் நகர், அப்பா மார்க்கெட், ஒழுகினசேரி கிராமம், நாகராஜா கோவில் ரத வீதி, அரச மூடுரோடு சந்திப்பு, மணிஅடிச்சான் கோயில், மீனாட்சிபுரம், தளவாய் தெரு, மீனாட்சி கார்டன், அழகம்மாள் கார்டன், ஊட்டுவாழ் மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி காலனி, வசந்த நகர், வடிவீஸ்வரம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
மாலையில் கம்பளம், கோட்டார், இடலாக்குடி, பட்டாரியார் நடுத்தெரு, கொளத்தூர், புத்தன்விளை, சரக்கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக சிவன் கோயிலில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் பிரச்சாரத்தில் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசிடம் பேசி கொண்டு வந்தேன். ஐ டி பார்க் வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்து பேசினேன். ரேஷன் கடைகள், சமுதாய நல கூட கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன். \
நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வலம்புரி விளை உரக்கடங்கை மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பெற்று தரப்படும். பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கிராமப்புற வேலை நாள் அதிகரிக்கப்படும். நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் என்று பேசினார். எம்.ஆர்.ராதா எம்எல்ஏ உடன் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக பிரமுகர்கள் உடன் சென்றனர்.



